ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் : جويرية بنت الحارث
ஹிஜ்ரி 5ம் ஆண்டு பனுல் முஸ்தலக் எனும் கோத்திரத்துடன் ஏற்பட்ட யூத்தத்தின் பின் அக்கோத்தித்திரத்தின் பெரும்பாலானோர் சிறைக்கைதிகளாகப் பிடிபட்டனர். அக்கோத்திரத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளே அன்னை ஜுவைரியா அவர்கள். இவர்களும் சிறைக்கைதியாகப் பிடிபட்டு ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்ற நபித்தோழரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். பணம் கொடுத்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒப்பந்தத்தை எஜமானுடன் செய்து கொண்டார்கள். அதற்கான உதவிப் பணம் கேட்டு நபிகளாரிடம் வந்தார்கள். நபியவர்களும் அவர்களுடைய கண்ணியத்தைக் கருத்திற்கொண்டு பணத்தை செலுத்தி அப்பெண்னை திருமணமுடித்துக் கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு வயது 20. அதனைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் நபியவர்களின் மனைவியுடைய உறவுக்காரரை அடிமைகளாக வைத்திருப்பதா என்று அவர்களை உரிமையிட்டார்கள். அதனைப் பார்த்த பனுல்முஸ்தலக் கோத்திரம் முழுதும் இஸ்லாத்தில் இணைந்துகொண்டது. ஜுவைரியா என்ற ஒரு பெண்ணால் ஒரு சமூகமே இஸ்லாத்தில் இணைந்தது அவர்களுக்குரிய சிறப்பம்சமாகும். அவர்களுடைய தந்தையும் இஸ்லாத்தை ஏற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹிஜ்ரி 56ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் இவர்கள் வபாத்தாகி ஜன்னதுல் பகீஇல் அடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.